அவன்:
இதோ...
அவளைப்பற்றிஆயிரம் கோடி பனிக்கட்டி கவிதைகள்...
ஒவ்வொன்றும்,
அவளின் எடை அளவுகள்..
அவை அனைத்தும் சிலிர்த்துக்கொண்டு
தனித்தனியாய் உருகிட,
அனைத்தையும்,
என் வலது உள்ளங்கையின்
ஓர் ஓரத்தில் தக்க வைக்கிறேன்..
அவள் முன்பே சொல்லி விட்டாள்..
என் கை நிறைய அவ்வுருகல்களை
அள்ளி எடுத்து சென்றால் தான்
என் காதலை ஏற்கஅவள் மனம் இறங்குமாம்....
அவள்:
இறையே...
ஒரு நொடியை,
நிமிடத்தின் அளவாக நீட்டித்து,
அக்கணக்கில்,
நூறு வருடம் ஆயுளை
அவனுக்கு மட்டும் தந்து விடு...
இது,
அவனுக்காய் நான் உருகி வேண்டும்
ஒரு கானல் வரம்...
வரத்தின் தோற்றத்தில்,
ஓர் நீட்டித்த ஆயுள் வாழ் தண்டனை...!!
என் காதலின் கர்வம்
சத்தியமென நினைக்கிறது...
என் போல துணை ஒருத்தி
நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் என
அவனுக்குனர்த்தும் அந்த நீட்டித்த ஆயுட்காலம் என....
0 comments:
Post a Comment