skip to main | skip to sidebar

நீர்க்குமிழி

காற்றாய் நுழைந்த கனங்களின் உட்பொதிவில்.......

கண்ணீரும் வியர்வையும் கரிக்கின்ற காரணமேன்?

பரிதவிப்போ இல்லை பரவசமோ...
கண் கொண்ட நீர் அறியும்
அது பெருகிவரும் காரணம் தன்னை...
வியர்வையும் நன்கறியும் - அது
உழைப்பு விடும் பரவசக் கண்ணீரென்று....
அந்நீர்கள் நிலத்தினிலே விழுந்திட்டால்
ஊரார் பார்த்திடுவர்;
பின் அங்கே,
அந்நீரின் "நதிமூலம்" ஆய ஆர்வம் கொண்டு - ஆனால்
அதை முழுதாயும் ஆயாமல்,
அவ்வூரின் "கடைமனிதன்" அவன் செவியில்
மூலத்தைத் திரித்துப் போய்ச் சேர்த்திடுவார்
எனப் பயந்து,
யாருக்கும் தெரியாமல் ஆழியிலேக் கலந்திடவே
சட்டெனத் தன்ச்சுவை மாற்றிக்
கரித்துக்கொண்டு வந்தனவோ......???
0 comments

என் இதயத்தின் முதுகில் கூர் வாள்.!

என் கண்ணீர் குட்டைநிரம்பி வழிகிறதே.......!
இறையே....!
அதனை ஒரு நொடியேனும்
வற்றச் செய்து விடுவாயா...?
என் காதல் துணைக்காய்
அன்பு செய்தே வாழ்ந்த இதயம்...
அவ்விதயத்தின் முதுகில் கூர் வாள் ஏறும் பலனா??
ஆயுதஙள் என் துணைக்கெதற்கு?!
" பிரிவு " யென சிறு சைகை செய்தால்,
உதிரம் இல்லா உலர் மரணம்
அதன் விழிகளுக்கு என் பரிசு!!!
இறையே....
நான் இறந்தால் என் துணை அழுதிடுமா?
இல்லை,
என் உயிரையும் குதர சொல்லி செய்திடுமா?
நீ அறிவாயா?
இல்லை அதனை அறிந்துணரும் வரம்
நீ எனக்கருள்வாயா.....????!
0 comments

கிழக்கு நமஸ்காரம் (சூரிய நமஸ்காரம் அல்ல....!!!)

என் தேடல்கள்,
உச்சி தொடங்கி,
கால் விரலின் நுனி தாண்டி
நூற்றாண்டு அணைக்கட்டு
வெள்ளப்பெருக்கில் உடைவடைப் போல
திடுமெனப் பொங்கிப் பெருகும் போதெல்லாம்,
மிகச்சரியாய்,
நான் கிழக்கு நோக்கி யாசிக்கத் தொடங்குகிறேன்...!!
அதுவும் பொய்யெனப் பொய்த்துப் போகாமல்,
முதலில் இரு கண்களை மூடி -
அதனைத்தொடர்ந்து கைகளைக் கூப்பியும்..
என் சனனக் காலம் முதற்கொண்டு,
அங்கே அதுவும்,
இங்கே இதுவும் எனதேடி முடித்தப் பிறகும்
எனக்கும்,
என் இதயத்தின் கனத்தைக் கூட்டும் மனதிற்கும் விளங்கவில்லை
"ஏனோ இந்த யாசகம்.....??"
கிழக்கு -விடியல்களை தினமும் பரிசளிக்கும் திசை என
சூரியன் உணர்துவதாலா?
இல்லை
தினசரி விடியல்களை
கிழக்கெதிர் திசைபிடுங்கித் தின்பதாலா..??
உதிக்க வைத்துப் பின் தின்னக்கொடுத்து
மீண்டும் உதித்து எழச் செய்வதாலோ என்னவோ
கிழக்கு ஒரு உன்னத திசை
என்பதை நான் அறிந்துசெய்யும் இந்த யாசகம்..
எனக்கும் ஒரு விடியலை தின்னக் கொடுக்கும்
எனும் "நம்பிக்கையில்..........."
0 comments

காதல் தோல்வி....

அவன்:
இதோ...
அவளைப்பற்றிஆயிரம் கோடி பனிக்கட்டி கவிதைகள்...
ஒவ்வொன்றும்,
அவளின் எடை அளவுகள்..
அவை அனைத்தும் சிலிர்த்துக்கொண்டு
தனித்தனியாய் உருகிட,
அனைத்தையும்,
என் வலது உள்ளங்கையின்
ஓர் ஓரத்தில் தக்க வைக்கிறேன்..
அவள் முன்பே சொல்லி விட்டாள்..
என் கை நிறைய அவ்வுருகல்களை
அள்ளி எடுத்து சென்றால் தான்
என் காதலை ஏற்கஅவள் மனம் இறங்குமாம்....
அவள்:
இறையே...
ஒரு நொடியை,
நிமிடத்தின் அளவாக நீட்டித்து,
அக்கணக்கில்,
நூறு வருடம் ஆயுளை
அவனுக்கு மட்டும் தந்து விடு...
இது,
அவனுக்காய் நான் உருகி வேண்டும்
ஒரு கானல் வரம்...
வரத்தின் தோற்றத்தில்,
ஓர் நீட்டித்த ஆயுள் வாழ் தண்டனை...!!
என் காதலின் கர்வம்
சத்தியமென நினைக்கிறது...
என் போல துணை ஒருத்தி
நிச்சயமாய் இருந்திருக்க வேண்டும் என
அவனுக்குனர்த்தும் அந்த நீட்டித்த ஆயுட்காலம் என....
0 comments
Newer Posts » « Older Posts Home
Subscribe to: Posts (Atom)

என்னைப் பற்றி:

தேவிகா
சத்தம் வெறுப்பவள். தனிமை நேசிக்கப் பழகியவள். வேறொன்றுமில்லை சொல்வதற்கு.
View my complete profile

இது வரை....

  • ►  2009 (2)
    • ►  November (2)
  • ▼  2010 (12)
    • ►  July (3)
    • ▼  August (4)
      • காதல் தோல்வி....
      • கிழக்கு நமஸ்காரம் (சூரிய நமஸ்காரம் அல்ல....!!!)
      • என் இதயத்தின் முதுகில் கூர் வாள்.!
      • கண்ணீரும் வியர்வையும் கரிக்கின்ற காரணமேன்?
    • ►  September (5)
  • ►  2011 (2)
    • ►  February (1)
    • ►  March (1)

Followers:

Total Pageviews

Subscribe to:

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
 
Copyright © நீர்க்குமிழி. All rights reserved.
Blogger templates created by Templates Block
Wordpress theme by Uno Design Studio