பரிதவிப்போ இல்லை பரவசமோ...
கண் கொண்ட நீர் அறியும்
அது பெருகிவரும் காரணம் தன்னை...
வியர்வையும் நன்கறியும் - அது
உழைப்பு விடும் பரவசக் கண்ணீரென்று....
அந்நீர்கள் நிலத்தினிலே விழுந்திட்டால்
ஊரார் பார்த்திடுவர்;
பின் அங்கே,
அந்நீரின் "நதிமூலம்" ஆய ஆர்வம் கொண்டு - ஆனால்
அதை முழுதாயும் ஆயாமல்,
அவ்வூரின் "கடைமனிதன்" அவன் செவியில்
மூலத்தைத் திரித்துப் போய்ச் சேர்த்திடுவார்
எனப் பயந்து,
யாருக்கும் தெரியாமல் ஆழியிலேக் கலந்திடவே
சட்டெனத் தன்ச்சுவை மாற்றிக்
கரித்துக்கொண்டு வந்தனவோ......???
0 comments:
Post a Comment