என் கண்ணீர் குட்டைநிரம்பி வழிகிறதே.......!
இறையே....!
அதனை ஒரு நொடியேனும்
வற்றச் செய்து விடுவாயா...?
என் காதல் துணைக்காய்
அன்பு செய்தே வாழ்ந்த இதயம்...
அவ்விதயத்தின் முதுகில் கூர் வாள் ஏறும் பலனா??
ஆயுதஙள் என் துணைக்கெதற்கு?!
" பிரிவு " யென சிறு சைகை செய்தால்,
உதிரம் இல்லா உலர் மரணம்
அதன் விழிகளுக்கு என் பரிசு!!!
இறையே....
நான் இறந்தால் என் துணை அழுதிடுமா?
இல்லை,
என் உயிரையும் குதர சொல்லி செய்திடுமா?
நீ அறிவாயா?
இல்லை அதனை அறிந்துணரும் வரம்
நீ எனக்கருள்வாயா.....????!
0 comments:
Post a Comment