புத்த புள்ளி எல்லை மட்டும்
பரவிக் கனத்த "போதி" யதை
கூர் ஆயுத முனையதிலே
ஆனைபல விசையேற்றி,
"வேர்கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்...
...........................
"அவனே,
அம்மர நிழலடியில்,
இச்சைகளை ஈது விட்டு
இன்பத்தை இரை செய்தான்..
பின் வென்று ஈன்ற இன்பத்தை
பகிந்து விடக் கொள்கை செய்தான்!!
...................
போதி விதைபிடுங்கி பரப்பிவிட்டால்
புவிநெடுக ஞான ஒளி பரவிடுமோ......??
விடும் - எனவே நினைத்திருந்து
"ஆசை" கொண்டு காத்திருந்தான்.....
தோற்று விட்டான் சித்தார்த்தன்!
கௌதமனாய் உருமாறி!!
......................
இம்மரம்,
அதனுள் முதன்பிறந்த வேர்த் தொடங்கி
கடைத் தோன்றி வேர் வரையில்
ஞானத்தை அப்பிக் கொண்டு,
கிளை வழியே அச் "சாரம்" புகுத்தும்...
இதோ...
" அவ்வேர்க் கொய்யும் நோக்கினிலே
வெட்டுகிறான் புத்தனவன்..."
....................
கொய்தெடுக்கும் அவ்வேர்ப் பலனை,
புவி பரவிய மண்துகள் முழுதும்
புகுத்திவிடத் திட்டமிட்டு
புவியெங்கும் காடாக்கி
"போதி" யிலே செழிக்கச்செய்ய,
"வெட்டுகிறான் புத்தனவன்...
வேர்க் கொய்யும் நோக்கினிலே"
0 comments:
Post a Comment