அவன் இட்ட வைக்கோல்என் கால் வயிறு அடைத்திருக்க,
மீதத்திர்க்காய் தலைதூக்கிஎன் தாயைக் கண்டேன்...
"கோ" மாதா அவளும் தன்னை
தாம்பினாலே சிறையும் தந்து,
உயிர் பரிதவிக்க,
ஊன் அங்கே வெண்ணிறத்தில் கரையக் கண்டேன்...
இவ்விடத்தே தாம்பிர்க்குப் பஞ்சமில்லை,
என் கழுத்தும் அதன் வசமே...
என் முக்கால் வயிறு தீயெனவே எரிந்திருக்க,
கோவதனை ஆர்வமேனப் பார்த்திருந்தால்,
ஊன் கரைதல் அதன் கண் வழியே - நிறமில்லா -
ஆனால்உப்புச் சுவைக் கொண்ட திரவம் கொண்டு நடக்கிறதே.....!!!
அது,
தன் கன்றிர்க்காய் பொங்கிவரும் அமிர்தம் தன்னை
அவன் கடத்திச் செல்லும்ஆத்ம ஊனின் நோவினாலா?
இல்லை அவன் கடத்திச் செல்லும் மும்முரத்தில்
அதிகமாய் ஓர் கை இழுவை தந்த
செதில் ஊனின் வலியினாலா?
அதை நினைதிங்கே நான் அழும் நேரம்
அவிழ்த்து விட்டான் என் தாம்பதனை...
என் தாயின் ஊன்வலியை போக்கிடவும்,
என் வயிற்றின் எரிச்சலையும் நீக்கிடவும்,
தாவிகுதித்து ஓடிச்சென்று
சுவைதிட்டேன் என் தாயின் காம்புவழி பெருகும்
"என் உணவதனை"...
அடக்கொடுமை!!
என் தாயின் ஊன் நோயும் அடங்கவில்லை,
என் பசியும் தீரவில்லை - ஆனால் தீர்ந்திட்டதாம்
இன்றைய உணவுச் சுரப்பின் அளவு மட்டும்...!!!!
0 comments:
Post a Comment