உருண்டையாக்கப்பட்ட உலோகமும்
வெட்டிச் செப்பனிட்ட காகிதமும்
ஜீவ இருப்பை நீளச்செய்ய
ஆறறிவி தன் புத்தியாலே கண்டறிந்து
பின் செயற்கைக்கு ஈந்து விட்ட குறுவரங்கள்...
கண்டறிந்து ஈயும் வரை அவ்வாறறிவி
கடவுளாய் வாழ்ந்திருந்தான்...
காலக்கடத்தலில்,
ஈந்திட்ட வரத்தினை திருப்பிடும் முயற்சியில்,
முழுக்கதையின் முக்கால் அத்தியாயம் முற்றும் -
எனக் கோடிடும் போது எத்தனித்து,
அடுத்தது ஆரம்பம் -
எனத் தொடங்கும் போது
பெருவாராய் முடிகிறது
கடவுளாய்ப் பிறந்து
மனிதனாய்த் தேய்ந்த
அவனின் ஜீவ இருப்பு.....
0 comments:
Post a Comment