தன் உடுப்புக் கிழிசல் வழி
உடல் தெரிய
அங்கே ஆணினம் கண்டிடப்பார்த்து
உயிர்கிழிந்த வலி போலே
குறுகிட்டாள் அங்கோர் ஏழைப் பெண்..
உடுப்பில் செயற்கைக் கிழிசல்
பல செய்து
ஆணினம் கவருவதில்
போதைக் கொண்டு மயங்கிட்டாள்
இங்கோர் மேலைப் பெண்..
பொம்மைச் சமுதாயத்தின் வாயின்வழி
வறுமையின் கிழிசல் வசை கூட வாங்குமாம்..
செயற்கைக் கிழிசலுக்கு"நாகரீகம்" எனும் பட்டமாம்.....!!
இந்நாகரீக கிழிசல்கள்
மொத்தமும் தைத்து விட
அத்தையலின் கை வருமா..??
கை வந்து சேர்ந்த பின்னர்
பழம் "கலைச்சாரம்" திரும்பிடுமா...??
இங்கே விடைகள் எல்லாம் மீதம்...
அவர் மனம் துளைக்கும் கேள்விகள் உண்டா...?
பொறுத்தேப் பார்ப்போம்..
0 comments:
Post a Comment